கோபாலப்பட்டிணத்தில் போதிய மழை இல்லாததால் தண்ணீரின்றி நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் நிரம்பாமல் கிடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் ஆகிய இரண்டு குளங்களை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டிணத்தில் கடந்த ( 2019 முதல் 2021 வரை ) 3 ஆண்டுகள் நல்ல பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது மக்களுக்கு தேவை பூர்த்தியானது.
பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது மழை பெய்த காரணமாக குளங்களில் கொஞ்சமாக தண்ணீர் உள்ளது. போதிய மழை இல்லாததால் குளங்கள் தண்ணீர் நிரம்பமால் காணப்படுகிறது.
கோபாலப்பட்டிணத்தில் கடந்த மூன்று வருடங்களாக மழை காலத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் குளங்கள் முழுவதும் நிரம்பின.
சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சில நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் கோபாலப்பட்டிணத்தில் மழை இல்லாமல் இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இரண்டு குளங்களில் தண்ணீர் இல்லாததால் கோபாலப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களுக்கு குளிப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது மழை காலம் முடியும் தருவாயில் உள்ளதால் எப்போது நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளங்கள் நிறையும் என ஏக்கத்துடன் உள்ளனர்.
கடந்த காலங்களில் இரண்டு குளங்களில் ஏதாவது ஒரு குளத்தில் உள்ள தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இரண்டு குளங்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் குளிப்பதற்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.