சேதுபாவாசத்திரம் அருகே, வலையில் சிக்கிய கடற்பசுவை, பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களை, வனத்துறையினர் பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மந்திரப்பட்டினத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த 3ம் தேதி, கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
விரித்த வலையை இழுத்த போது, வலையில், கடற்பசு சிக்கி உயிருக்கு போராடியது. உடனே, மீனவர்கள் ஒன்று சேர்ந்து, வலையை அறுத்து, கடற்பசுவை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர்.
இதை, அவர்கள் 'வீடியோ' பதிவு செய்து தமிழக வனத்துறை மற்றும் 'வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கும் அனுப்பினர்.
இதையடுத்து, அந்த மீனவர்களை பாராட்டும் விதமாக, சேதுபாவாசத்திரம் அருகே, மீனவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில், தமிழ்நாடு வனத்துறை சார்பில், 11 மீனவர்களுக்கும், தலா 5,000 ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம், சேதமடைந்த மீன் வலைக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பரிசு தொகையை, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி வழங்கினர்.
'அபூர்வ வகை உயிரினங்களான கடற்பசுவை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும்.
'கடற் பசு, மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், அதை கடலுக்குள் மீண்டும் விட வேண்டும்' என, மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.