புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெம்மேலிவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு அதே பகுதியின் அருகே உள்ள கொள்ளுத்திடல் கிராமத்திலிருந்து 15 ற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கொள்ளுத்திடலிலிருந்து கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நெம்மேலிவயல் பள்ளியை அடைவதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டியதாலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிள்ளைகளை அனுப்ப அச்சம் உள்ளதாலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கண்மாய்கரை மற்றும் வயல்காடு வழியாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அவ்வாறு செல்லுகின்ற பாதையின் குறுக்கே ஆறு செல்லுவதால், அந்த ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பலகையின் மூலம் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிச் சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் அடுத்த மழைக்காலம் வருவதற்குள் குறுக்கு பாலம் மற்றும் கண்மாய்கரை வழியாக தார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.