கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் பனிப்பொழிவு




கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் பனிப்பொழிவு  ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு  வெளியிட்டுள்ள அறிக்கையில்
 
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விழகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு ஜனவரி 12-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதோடு மீனவர்களுக்கான எச்சரிக்கை என்று எதுவும் இல்லை.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல்  கோபாலப்பட்டிணள கடந்த சில நாட்களாக முதல் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகின்றது காலையில் விடிந்த பிறகும் இருள் சூழ்ந்தே இருந்தது.

பனி மூட்டம் காரணமாக கடும் குளிர் நிலவியது. குளிரை தாங்க முடியாமல் முதியவர்களும், குழந்தைகளும் அவதிப்படுகின்றனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments