மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி , கோலப் போட்டி மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சமத்துவக் பொங்கல் போன்ற முப்பெரும் விழா நடைபெற்றது.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் சமத்துவ பொங்கல் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறி திட்டத்திற்கான விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. கல்வியின் அவசியம் கையெழுத்து போடுவதன் அவசியம் மற்றும் எழுத படிக்க தெரிந்து கொள்வது பற்றிய அவசியத்தை எடுத்துக் கூறப்பட்டது. மேலும் புதிய பாரத திட்டத்தில் கற்போர் கோலப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தனர்.
கோலப் போட்டியில் வெற்றி பெற்ற கற்போருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அந்தோணியம்மாள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கையர் கன்னி மற்றும் இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஜான் பீட்டர் செபஸ்தியான், சித்ரா, பேபி சாந்தி மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.