புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தனி சிறப்பு உண்டு. நாடு சுதந்திரம் 1947-ம் ஆண்டு பெற்ற பிறகும் புதுக்கோட்டை சமஸ்தானம் தனியாக இயங்கி வந்தது. அதன்பின் 1948-ம் ஆண்டு நாட்டுடன் புதுக்கோட்டை இணைக்கப்பட்டது. அப்போது மன்னராக இருந்த ராஜகோபால தொண்டைமான், சமஸ்தானத்தை இணைத்து கையெழுத்திட்டார். திருச்சி, தஞ்சாவூர் ஒருங்கிணைந்து இருந்த பகுதிகளை பிரித்து புதுக்கோட்டையை தனி மாவட்டமாக கடந்த 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி உருவாக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி புதுக்கோட்டை மாவட்டத்தை அறிவித்து உருவாக்கினார். இது தொடர்பாக நினைவு ஸ்தூபி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு 49 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாளான நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அடுத்த ஆண்டு 50-வது ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் ஸ்தூபியில் உள்ள கல்வெட்டுகளும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து முறையாக பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.