ராமேசுவரம் பகுதியில் நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன் துறை உதவி இயக்குனர் அப்துல், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தடை செய்யப்பட்ட வலைகள் வைத்து மீனவர்கள் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகிறார்களா? என்பது குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சோதனையின்போது ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று வந்த 97 படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடித்தது தெரியவந்தது.
மேலும் இதில் 49 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு வாங்காமல் மீன் பிடிக்க சென்று வந்ததும் தெரியவந்தது. இந்த 97 படகுகள் மீதும் அபராதம் விதித்து மேல் நடவடிக்கைக்கும் மீன் துறை துணை இயக்குனருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து பிடித்து வந்ததாக விசைப்படகுகளில் இருந்த 4 டன் மீன்களை மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மீன்களை ரூ.32 ஆயிரத்துக்கு வியாபாரிகளிடம் ஏலம் விட்டனர்.
கடந்த 20-ந்தேதி அன்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகள் வைத்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

 
 
 
 
 
 
 
 
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.