புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி’ அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும் நெகிழி மாசில்லா என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நாட்காட்டிகளையும் வழங்கினார். கண்காட்சி வருகிற 1-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தொகுத்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி உள்ளது. இந்தநிகழ்வில் தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்தநிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.