மதுரையில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி‌ காரணமாக இன்று (09/02/23) முதல் (01/03/23) வரை செங்கோட்டை -மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்லும்




மதுரையில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி‌ காரணமாக இன்று (09/02/23) முதல் (01/03/23) வரை   செங்கோட்டை -மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்லும் 

இன்று (09/02/23) முதல் மார்ச் 01 வரை   16848/செங்கோட்டை-மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் மானாமதுரை  சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை வழியாக இயக்கப்படவுள்ளது.

மேலும் இந்த ரயிலுக்கு மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இந்த ரயில்  காலை 11:50 முதல் 12:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காலை 10:30 மணிக்கு பிறகு திருச்சி செல்பவர்களும், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில்,ராஜபாளையம்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை வருபவர்களும் இதே ரயிலை பயன்படுத்தலாம்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments