மணமேல்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




மணமேல்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டவுன் பஸ் இயக்கப்படவில்லை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே மணலூர் ஊராட்சியில் கீரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக அறந்தாங்கியில் இருந்து மணமேல்குடி வரை தினசரி காலை 6 மற்றும் 7.30 மணிக்கு இயக்கப்படும் 19 நம்பர் டவுன் பஸ் மூன்று மாதத்திற்கு மேல் காலை நேரத்தில் இயக்கப்பட வில்லை.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலை மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பெண்கள், முதியோர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்து பணிமனை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீரனூர் கிராமத்தில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டவுன் பஸ் தினசரி காலை நேரத்தில் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்னர். இ்ந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments