புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாலிபால், கூடைப்பந்து, சிலம்பம், இறகுப்பந்து, நீச்சல், மேசைப்பந்து, வளைகோல்பந்து, கால்பந்து, கபடி, தடகளம், கிரிக்கெட் போட்டிகளும், பொதுப் பிரிவினருக்கு வாலிபால், தடகளம், சிலம்பம், இறகுபந்து, கபடி, கிரிக்கெட், செஸ், கையுந்துப்பந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபடி, செஸ், தடகளம், கையுந்துப்பந்து, இறகுபந்து போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், இறகுபந்து, அடாப்டட் வாலிபால், எறிபந்து, கபடி போட்டிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் நேற்று தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து மண்டல மற்றும் மாநில அளவிலும் பங்கேற்க உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.