மணமேல்குடியில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மணமேல்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, முடநீக்கு அறுவை சிகிச்சை, ஆரம்பகால மறுவாழ்வு பயிற்சி பரிந்துரை, உதவி உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித் தொகை, வங்கிக் கடன் வழங்குவதற்காக நபர்களை தேர்ந்தெடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியன நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனியார், நலத்திட்ட அலுவலர் தினேஷ், தலைமை ஆசிரியர் சங்கர், மருத்துவர்கள் சுகன்யா, ஜெயகர், சுந்தரமூர்த்தி, சுலைத்கான், சிவரஞ்சனி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments