இம்மாணவியின் அம்மா இறந்து விட்டார். அக்கா திருமணமாகி வெளியூர் சென்று விட்டார். அப்பா கூலி வேலைக்கு சென்றதால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
தேவகோட்டை அருகே பாவனக்கோட்டை அண்ணாத்துரை மகன் கார்த்திக் 31, பிப்., 6 வீட்டில் தனியாக இருந்த மாணவியை ரூ.3,000த்துடன் கடத்தி சென்றார். மாணவியின் தந்தை மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை. தந்தையே மகளை தேடினார். பிப்., 8 இரவு 11:00 மணிக்கு தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்த மகளை மீட்டார்.
இவ்வழக்கில் முதலில் கார்த்திக்கை தேவகோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். அதன் பின் மேல் விசாரணை செய்ய போலீசார் அக்கறை காட்டவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து மகளிர் போலீசார் பிப்., 10ல் மாணவியை காரைக்குடி குற்றவியல் நடுவர் ஜெயபிரபா முன் ஆஜர்படுத்தினர்.
மாணவி அளித்த வாக்குமூலத்தில் கார்த்திக் பகல் முழுவதும் பஸ் ஸ்டாண்டில் பசியுடன் தவிக்க விட்டு இரவில் டிபன் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நண்பர்களுக்கு இரையாக்கியதும் தெரிந்தது. கார்த்திக் நண்பர்கள் மாணவியை பாலியல் கொடுமை செய்து பகலில் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர்.
இதில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலபட்டினம் அப்துல்லா மகன் முகமதுஷெரீப் 22, திருவேகம்புத்துார் அருகே அங்காளகோட்டை சேகர் மகன் விஜய் 23, மற்றும் தேவகோட்டை வாரியன்வயல் சிறுவனை கைது செய்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.
முகமதுெஷரீப், விஜய்யை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிறுவனை சிவகங்கை இளஞ்சிறார் நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி முன் விசாரணைக்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தினார்.
மாணவியின் அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்களின் அலைபேசி எண்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாணவி மற்றும் கைதானோர் அலைபேசிகளை சென்னை தடயவியல் ஆய்வக பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.