SP பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி சினிமா காட்சியை போல பறந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயம்




இராமநாதபுரம் மாவட்டம் எஸ் பி பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில்  அதிவேகமாக வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி சினிமா காட்சியை போல பறந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வட்டாணம் விளக்கு வளைவு சாலையில் தொண்டி நோக்கி அதிவேகமாக வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டு இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி சினிமா காட்சியைப் போல பறந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் இளைஞர்கள் மூன்று பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார் இளைஞர்கள் மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இளைஞர்கள் பலத்த காயத்துடன் சுயநலவின்றி இருந்ததால் அவர்களைப் பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து எஸ் பி பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் சினிமா காட்சியைப் போல நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments