பாசிப்பட்டினத்தில் கோவில் விழாவையொட்டி கடலில் சீறிப்பாய்ந்து பாய்மர படகுகள் சென்றன. இதை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.
பாய்மர படகு போட்டி
திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தி.மு.க. சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 36 படகுகள் கலந்து கொண்டன. காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் ஒரு படகுக்கு ஆறு பேர் வீதம் படகுகளை இயக்கினர்.
இதில் முதல் பரிசை தொண்டி புதுக்குடி ஏழுமுக காளி, ஏழு லெட்சுமி, 2-வது பரிசை வடக்கு புதுக்குடி குகா, தனுஸ்ரீ, 3-ம் பரிசை திருப்பாலைக்குடி முனியய்யா, குகாஸ்ரீ, 4-ம் பரிசு நம்புதாளை கருப்பையா, கார்மேகம், 5-ம் பரிசை முள்ளிமுனை சமயராஜா ஆகியோரது படகுகள் பெற்றன.
ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர்
நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்துமனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர் அன்வர் சதாத், மாவட்ட பிரதிநிதி அமீர்கான், கலிய நகரி ஊராட்சி தலைவர் உம்முசலீமா நூருல் அமீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். கடலில் பாய்மர படகுகள் சீறி பாய்ந்து சென்றதை பார்த்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.