புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு இந்திராணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அரசு மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் இப் பயிற்சியில் மாணவிகளுக்கு கராத்தே ஜூடோ டீக்வொண்டோ இவற்றுள் ஏதேனும் ஒரு பயிற்சியினை மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் , பள்ளி அளவில் ஒரு பொறுப்பு பெண் ஆசிரியை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் கராத்தே பயிற்சி வழங்கப்படும் விவரத்தினை பள்ளி மேலாண்மை குழு மூலம் தீர்மானங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சியில் மாணவிகளின் வருகை பயிற்றுநர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டன. மேலும் இப்பிற்சியினை தலைமை ஆசிரியர்கள் மற்றும் கராத்தே பயிற்றுநர்கள் மாணவிகளுக்கு சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது இக்கூட்டத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை உயர்நிலை பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.