ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். பொன்பேத்தி வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு தொழுநோய் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களிடையே தொழுநோய் சார்ந்த வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் மாத்திரை வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், விலங்கியல் ஆசிரியை புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.