புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சியிலிருந்து மறவாமதுரைக்கு செல்லும் சாலை சமீபத்தில் போடப்பட்டது. இந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் வேகத்தடைக்கு முன்எச்சரிக்கை பலகை வைக்காமலும், வேகத்தடைக்கு வர்ணம் பூசாமல் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பலரும் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கினர். அவ்வாறு விபத்து ஏற்படுவதை உணர்ந்த அப்பகுதி இளைஞர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இளைஞர்கள் தாங்களே முன்வந்து வேகத்தடைகு முன் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்ததோடு, வேகத்தடைக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசினர். மேலும் அம்மன்குறிச்சியிலிருந்து சொக்கநாதபட்டி பிரிவு சாலை மற்றும் சொக்கநாதபட்டி ஊர் நுழையும் முன்பு ஊரின் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.