தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டம் எப்போதுமே அதிக அளவில் சரக்குகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடப்பு நிதியாண்டில் அதாவது 2002 ஏப்ரல் 1 முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சுமார் 11 மில்லியன் ( ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்) சரக்குகளை கையாண்டு ரூ.673 கோடியை வருவாயாக ஈட்டி உள்ளது. இது திருச்சி கோட்டத்தின் மொத்த வருவாயில் 86.80 சதவீதம் ஆகும்.
இந்த வருவாய் கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்த 53.32 சதவீதம் வருவாயை விட அதிகமாகும்.
இதில் நிலக்கரி மூலம் ரூ.465.05 கோடியும், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் மூலம் ரூ.106.04 கோடியும், சிமெண்ட் மூலம் ரூ.43.62 கோடியும் கிடைத்து உள்ளது.
நிலக்கரி ஏற்றியதின் மூலம் மட்டும் 135.6 சதவீதம் வருவாயும்,உணவு தானியங்கள் ஏற்றி இறக்கியதன் மூலம் 61.23 சதவீதமும் வருவாய் அதிகரித்து உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சரக்குகளை கையாண்டதில் தெற்கு ரயில்வேயில் அதிக வருவாயை ஈட்டி திருச்சி கோட்டம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருச்சி கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்தின் மூலம் 11.685 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்று சாதனை படைக்க காரணமாக இருந்த திருச்சி கோட்ட ரெயில்வே பணியாளர்களுக்கு கோட்ட ரயில்வே சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.