கோபாலப்பட்டிணத்தில் மிஃராஜ் விழா!




கோபாலப்பட்டிணத்தில் மிஃராஜ் இரவை முன்னிட்டு தேங்காய் சோறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் வருடம் வருடம்  ரஜப் பிறை 27-ஆம் மிஃராஜ் இரவை முன்னிட்டு ஊர் பொதுமக்களுக்கு உணவு (தேங்காய் சோறு) வழங்கப்படும். 

அதனடிப்படையில் நேற்றைய தினம் 19.02.2023 அன்று 11.00 மணியளவில் தேங்காய் சோறு வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று வாங்கி சென்றனர்.

ஒரு டோக்கனின் விலை ரூ.200 என நிர்ணைக்கப்பட்டு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்பட்டு தேங்காய் சோறு வழங்கப்பட்டது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments