குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நியமனம் செய்துள்ளார்.
பழைய குற்றாலம் அருவியில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி கலெக்டர் நியமித்தார்.
அருவியில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதன் குடும்பத்தினருடன் குளித்தார். அப்போது அவரது 4 வயது பெண் குழந்தை ஹரிணி திடீரென்று அருவி தண்ணீரில் சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இழுத்து செல்லப்பட்டாள்.
அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர், உடனே தண்ணீரில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து விஜயகுமாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
கார் டிரைவராக நியமித்த கலெக்டர்
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாரை நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். மேலும் அவருக்கு வருங்காலத்தில் எந்த உதவி தேவையென்றாலும் தன்னை அணுகுமாறும் கூறினார்.
தொடர்ந்து விஜயகுமாரின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு தற்காலிக டிரைவர் பணியை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். அதன்படி தூத்துக்குடி சிப்காட் நில அளவை பிரிவில் தற்காலிக ஓட்டுனராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், தொடர்ந்து கலெக்டரின் கார் டிரைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.