சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
சென்னையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்குவதை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரெயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவை பொறுத்தவரை சென்னையில் 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக 118 கிலோ மீட்டருக்கு ரூ.63 ஆயிரம் கோடி அளவிற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ பணியானது நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் முதற்கட்ட மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்ளவதற்காக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த வகையில் சென்னை மெட்ரோ நிறுவனமும் தொடர்ந்து அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ரெயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் அறிக்கையில் இடம்பெறும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுரையில் முதல்கட்டமாக 18 ரெயில் நிலையங்களுடன் 31 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும். முதல்கட்டமாக மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.