புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வா் கு. ரேணுகாதேவி தலைமை வகித்தாா். அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராம் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மு. திருவாசகம், ஆங்கிலத் துறைத் தலைவா் அ. கணேசன் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவா்கள் பாடப்பிரிவுகள், உள்கட்டமைப்பு மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையாா்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 240 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச. ரமேஷ் வரவேற்றாா். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. செந்தில்குமாா் நன்றி கூறினாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் மு. பழனித்துரை தொகுத்து வழங்கினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.