ஆதார் எண்
அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அவசியமாகிறது. இதில் 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையில் ஆதார் எண் பெற்றவர்களிடமிருந்து எந்தவொரு ஆவணங்களும் உடன் பதிவு செய்யப்படவில்லை. எனவே திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதில் தவறுகளை களைவதற்கு சமீபத்திய தனிப்பட்ட விவரங்களுடன் ஆதார் தரவுகளை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் அட்டை தரவுகளை சரி பார்ப்பதில் எந்த சிரமமும் ஏற்படாத வகையில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் இருப்பிட விலாசங்களை புதுப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இணையதளம்
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையை பெற்று அதன் பிறகு எந்த ஒரு ஆவணங்களையும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாமல் உள்ளவர்கள், தகுந்த ஆவணங்களை பயன்படுத்தி புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்துடன் ஆதார் அட்டையை புதுப்பிக்கும் வசதியினை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் வழங்கியுள்ளது.
"My Aadhaar Portal"
என்ற இணையதளம் வாயிலாக அல்லது அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் மூலமாக புதுப்பிக்கலாம்.
மேலும், 2012 முதல் 2016-ம் ஆண்டுகளுக்குள்ளாக ஆதார் எண் பெற்றவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் என ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தி தங்களின் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.