மணமேல்குடி அய்யனார் கோவிலில் கலையரங்கம் திறப்பு




மணமேல்குடியில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த அய்யனார் கோவில் வளாகத்தில் மணமேல்குடி ஊராட்சி மன்றம் சார்பில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன், துணை தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments