புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; நண்பர்கள் 2 பேர் பலி




புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சின்ராசு (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் கார்த்திக் (23). பெயிண்டர். சின்ராசு நாளை மறுநாள் வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்தார்.

நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டில் இருந்து திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சின்ராசு, கார்த்திக் ஆகிய இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments