கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்




கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக  பனிப்பொழிவு நிலவியது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

வெயிலை சமாளிப்பதற்கு இளநீர், சர்பத், மோர், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியாக பொருட்களை தேடி வாங்கி சாப்பிடுகின்றனர்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments