புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 18,840 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,452 பேர் தேர்வு எழுதவரவில்லை.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவர்கள் 9,737 பேரும், மாணவிகள் 10,555 பேரும் என மொத்தம் 20,292 பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்காக மாவட்டத்தில் 97 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பாளர்கள், மைய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்பாடத்துடன் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 8,813 பேரும், மாணவிகள் 10,027 பேரும் என மொத்தம் 18,840 பேர் எழுதினர். இத்தேர்வை 924 மாணவர்கள், 528 மாணவிகள் என 1,452 பேர் எழுதவரவில்லை.
கலெக்டர் ஆய்வு
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தமிழ் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். முன்னதாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் கவிதாராமு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேர்வையொட்டி தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேட்டை தடுக்க பறக்கும்படையினர் தேர்வு மையங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டனர்.
பிளஸ்-1 வகுப்புக்கான ஆங்கில பாடத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி நிறைவடைகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.