தொண்டி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொண்டியை சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் தங்களது அன்றாட பணிகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் புதிதாக ஆதார் அட்டை பெறுவதற்கும், திருத்தம் செய்வதற்கும் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், கலெக்டர் ஜானி டாம் வர்கீசை நேரில் சந்தித்து தொண்டியில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் தொண்டியில் ஆதார் சேவை மையம் அமைத்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொண்டி பேரூராட்சி பாவோடி மைதானம் பகுதியில் ஆதார் சேவை மையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலி கான் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.