தமிழகத்தில் கடந்த மாதம் வரை மழை பெய்து வந்த நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. மேலும் வெயில் கால நோய்களில் இருந்து பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
கோடை வெயில்
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடைகாலம் தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் படி தமிழகத்தில் உச்சி வெயில் நேரமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியே வர வேண்டாம் எனவும், வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வெயில் கால பாதிப்புகளான உடல் சூடு, வாந்தி, மயக்கம், தலைவலி, தலைசுற்றல், தோலில் எரிச்சல் ஆகியவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும், வெளியில் செல்ல உடலை மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் அதிகமாக இருப்பதால் பக்கவாதம், இறப்பு ஆகியவை ஏற்படுவது குறித்து தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.