மேலஸ்தனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்!



மணமேல்குடி ஒன்றியம், மேலஸ்தனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்கள், தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ,எஸ்எம்சி தலைவர் ஆகியோர் முன்னிலையிலும் விழா நடைபெற்றது.விழாவில் ஆசிரியர்கள் சித்ரா, மலர்விழி ,கற்பகம், கார்த்தீஸ்வரி ,சத்துணவு அமைப்பாளர் ,மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தலைமையாசிரியர் வாசுகி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எண்ணும் எழுத்தும்  சிறு கண்ணோட்டம் பற்றி திருமதி பெனிலா அவர்கள் உரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெற்றோர்கள் எண்ணும் எழுத்தும் கண்காட்சியை கண்டனர். மாணவர்களின் படைப்புகளையும் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளில் மாணவர்களோடு பெற்றோர்களும் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் சுயபடப்பலகையில் மாணவர்களும் பெற்றோர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெசிந்தா அவர்கள் நன்றி உரை வழங்க விழா நிறைவடைந்தது.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments