மணமேல்குடி ஒன்றியம், மேலஸ்தனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்கள், தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம், ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ,எஸ்எம்சி தலைவர் ஆகியோர் முன்னிலையிலும் விழா நடைபெற்றது.விழாவில் ஆசிரியர்கள் சித்ரா, மலர்விழி ,கற்பகம், கார்த்தீஸ்வரி ,சத்துணவு அமைப்பாளர் ,மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தலைமையாசிரியர் வாசுகி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எண்ணும் எழுத்தும் சிறு கண்ணோட்டம் பற்றி திருமதி பெனிலா அவர்கள் உரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெற்றோர்கள் எண்ணும் எழுத்தும் கண்காட்சியை கண்டனர். மாணவர்களின் படைப்புகளையும் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளில் மாணவர்களோடு பெற்றோர்களும் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் சுயபடப்பலகையில் மாணவர்களும் பெற்றோர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெசிந்தா அவர்கள் நன்றி உரை வழங்க விழா நிறைவடைந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.