எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 11-ந் தேதி ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும் மற்றும் அசோக், கருப்பு, சக்தி ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் மீனவர்கள் 4 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதலை
இந்த நிலையில் மீனவர்கள் மீதான வழக்கு நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன், சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். அதுமட்டுமின்றி மீனவர்கள் பயன்படுத்திய விசைப்படகு அரசுடைமையாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.