மானாமதுரை காரைக்குடி, , புதுக்கோட்டை திருச்சி கரூர் நாமக்கல் சேலம் தர்மபுரி பெங்களூர் வழியாக வாரந்தோறும் இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே இரு மாா்க்கத்திலும் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது ஹாவேரி, ராணிபென்னூா், தாவணகெரே, சிக்ஜாஜூா், தும்கூா், யஸ்வந்த்பூா், பனஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சென்று வருகிறது. இந்த வாராந்திர ரயிலானது வரும் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹூப்ளி - ராமேஸ்வரம் விரைவு ரயிலானது (எண் 07355), கா்நாடக மாநிலம், ஹூப்ளியில், ஏப். 1-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சேலத்தில் இரவு 7.50 மணி, நாமக்கல்லில் இரவு 8.44 மணி, கரூரில் இரவு 9.58 மணிக்கு வந்து ராமேஸ்வரத்தை ஞாயிறு காலை 6.15 மணிக்கு சென்றடையும்.
பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயிலானது ஹூப்ளி - ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும்
.
மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர விரைவு ரயிலானது (எண் 07356) ஏப். 2-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு கரூரில் அதிகாலை 3.48 மணி, நாமக்கல்லில் காலை 4.19 மணி, சேலத்தில் காலை 5.45 மணிக்கு வந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை இரவு 7.25 மணிக்கு சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.