இராமநாதபுரம் மாவட்டம் SPP சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பாக அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை பெற தகுதியுடைய நபர்களின் வீட்டிற்கு சென்று அர்களை சந்தித்து கணக்கு எடுப்பது என நிர்வாகத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சங்க நிர்வாகிகள் கருக்க வெட்டித்தெரு, அம்பலம் தெரு மருவண்டி குண்டுப் பகுதியில் தகுதியுடையோரை சந்தித்து ஆலோசனை மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பனியின் போது முதியோர் உதவித்தொகை கடந்த ஒரு வருடமாக வரவில்லை என புகார் கூறினார். அதனடிப்படையில் அவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு சம்ந்தபட்ட துறையை அணுகி விரைவில் உதவித்தொகை பெற வழிவகை செய்து கொடுக்கபட உள்ளது. விதவை பெண்கள் உதவித் தொகை ஒரு வருடம் மற்றும் 8 மாதங்களாக பணம் வராவில்லை என இரண்டு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் தங்களின் தாய் அல்லது தந்தையை இழந்தால் அவர்களுக்கு வைப்பு நிதியாக ரூபாய் 75 ஆயிரம் அரசு வழங்குகிறது. அதை அந்த மானவர்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் ஓரியூரில் படிக்கும் மூன்று மாணவர்களின் தாய்மார்களிடம் இச்சலுகைகளை பெற்றிட ஆலோசனை வழங்கப்பட்டது. ஒரு பெண்ணின் கணவர் விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரின் விபத்து வழக்கு பல வருடங்களாக நடந்த வருகிறது. அதை விரைந்து முடித்து தர கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் வழக்கறிஞர் விபரஙக்ளை கேட்டறிந்தோம் மற்றும் அந்த வழக்கு சம்ந்தமான விபரங்கள் தெரியபடுத்தப்படும்.
தகவல்: சாதிக்-செய்தி தொடர்பாளர், SPP சமூக ஆர்வலர்கள் குழு, எஸ்.பி.பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.