ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 17-க்கான கேள்விகள்!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி ரமலான் பிறை 06 (29/03/2023) முதல் 25 (17/04/2023) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 29/03/2023 ரமலான் பிறை-06 முதல் இணைய வழி இஸ்லாமியப் போட்டிக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய வேண்டுகோள்:
  • கேள்வி பதில் போட்டியின் முதல் நாளன்று எவ்வாறு தங்களுடைய பெயரையும், முகவரியையும் பதிவு செய்துள்ளீர்களோ அதுபோலவே தினமும் பதிவு செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • கேள்விக்கான பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்து விட்டீர்களா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நீங்கள் SUBMIT செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை கேள்விக்கான Link-ஐ கிளிக் செய்து சோதித்து பார்த்துக் கொள்ளவும் . நீங்கள் SUBMIT செய்திருந்தால் "You have already answered this question" என்று வரும் இல்லையென்றால் மீண்டும் பதிலை அளித்துவிட்டு SUBMIT  செய்யவும்.
பிறை 17-க்கான கேள்விகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு: கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களா என்று சரிபார்த்துக் கொண்டு SUBMIT செய்யவும்.

 🚨 கேள்வி பதில் நிகழ்ச்சியின் இரு முக்கிய விதிமுறை🚨
  1. ஒரு நபர் தனது வேறு, வேறு பெயர்களில் இரண்டு முறை பதில் அனுப்பக் கூடாது. (உதாரணத்திற்கு ஒரு தாயோ, தந்தையோ தனது இரண்டு பிள்ளைகள் பெயரில் இரு முறை பதில் அனுப்பினால் அந்த பதில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்).
  2. பதில் அளிக்கக்கூடிய நபர் தனது பெயரில் ஒரு முறை மட்டுமே பதில் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் வந்தால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  3. தனக்கு பதில் தெரிந்தால் முடிந்தளவு மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
பிறை-16 கேள்விக்கான பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்று பதில் அளித்த அனைவரும் தாங்கள் பதில்களை சரியாக தேர்வு செய்திருக்கிறோமா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.

1. மூஸா (அலை) அவர்களை ஈமான் கொண்ட மக்களை வழிகெடுத்தவன் யார்..?

சாமிரி (அல்குர்ஆன்-20:85)

2. நான்கு கலிஃபாக்களில் ஒருவரான இவர்கள் நபி (ஸல்) அவர்கள் கலந்துக் கொண்ட போர்களில் ஒரு போரைத் தவிற மற்ற அனைத்து போர்களிலும் நபியுடன் கலந்துக் கொண்டார்கள். இவர்கள் யார்?

அலி (ரலி), தபூக் போர் (புகாரி 4416)
உஸ்மான் (ரலி) , பத்ர் போர் (புகாரி 3130)

3. இது இறை நம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தி என்று எதை நபியவர்கள் குறிப்பிட்டார்கள்-?

ஒரு மனிதரின் நற்செயலை மக்கள் பாராட்டிப் பேசுவது. (முஸ்லிம் 5144)

4.பூமியில் இரண்டாவதாக அமைக்கப் பெற்ற இறையில்லம் எது-?

அல் மஸ்ஜிதுல் அக்ஸா

5. மக்களுக்கு தொடர்ந்து 30 நாட்கள் தொடர்ந்து மழை பெய்வதை  விட இது சிறந்தது என நபியவர்கள் எதனை குறிப்பட்டார்கள்?

(சுனனுந் நஸயீ 4820)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(அல்லாஹ்வின்) குற்றவியல் சட்டம் இந்தப்பூமியில் நிலைநாட்டப்படுவதுஇந்நிலவாழ் மக்களுக்கு முப்பது நாள்கள் (தொடர்)மழை பொழிவதைவிடச் சிறந்தது." இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்தப் போட்டியை குறித்து ஏதேனும் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிவிக்கவும்…


இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments