கோபாலப்பட்டிணம் காட்டுகுளத்தில் வளர்ந்து வரும் கோரை புற்களை ஊராட்சி நிர்வாகம் அகற்ற பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் ஆறு குளங்கள் உள்ளது. இதில் இரண்டு குளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று தான் காட்டுக்குளம் ஆகும். இந்த குளத்தினை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தக்குளத்தில் இருந்த நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டது.
இந்தக் குளம் சுமார் 7 ஆண்டுக்கு முன் தூர் வாரப்பட்டது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் வரத்து இல்லாததால் குளம் குட்டை போல் உள்ள நிலையில் அதில் பள்ளிவாசல் அருகே கோரை புற்கள் முளைத்துள்ளது. இந்தக்கோரை காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் விரைவில் மாசடைய வாய்ப்புள்ளது. எனவே தண்ணீர் இல்லாத இந்த நிலையில் குறைவாக உள்ள இந்த கோரை புற்களை அகற்றி குளத்தில் உள்ள தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாயை ஊராட்சி நிர்வாகம் தூர் வார வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.