மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேம்பாலத்தை நேற்று பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மாலை 6.47 மணிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பாலத்தின் வழியே மக்கள் உற்சாகமாக பயணித்தனர்.
மதுரை - நத்தம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் சொக்கி குளத்தில் இருந்து ஊமச்சிகுளத்தை அடுத்த மாரணி வரை 7.3 கிமீ தூரத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் இருவழியாகவும், கீழே இரு வழியாகவும் புதிய வடிவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு விட்டது. ஊமச்சிகுளத்திலிருந்து நத்தம் வரையிலான 4 வழிச்சாலையில் இன்னும் சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் ரூ.613 கோடியில் கட்டப்பட்ட, மதுரை- நத்தம் சாலை மேம்பாலத்தையும், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் காணொலி மூலம் திறந்துவைத்தார்.
பிரதமர் பாலத்தை திறந்ததும் பொதுமக்களின் வாகனங்களை மேம்பாலத்தில் அனுமதிக்கும் வகையில், மதுரையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சொக்கிகுளம் அருகே பாலம் தொடங்கும் இடத்தில் கரும்பு, வாழை மரங்களால் பசுமை தோரண வாயிலை அமைத்திருந்தனர். மாலை 6.47 மணிக்கு பாலத்தை திறந்து வைத்ததும் பொதுமக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.