எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும். புதுக்கோட்டை வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்திற்கு தினமும் பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்க கூடிய வட மாநில ரெயில்கள், சென்னை செல்லும் பல்லவன், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகம்.
பயணிகள் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வருவாய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல் என மேம்பாட்டு பணிகள் அம்ரித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.
தானியங்கி டிக்கெட் எந்திரம்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போது முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகத்திற்கு கவுண்ட்டர் ஒரே இடத்தில் செயல்படுகிறது. இதில் முன்பதிவு டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். சில நாட்கள் கவுண்ட்டரில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே இருந்து டிக்கெட் வினியோகிப்பார். இதனால் காலதாமதம் ஏற்படும். கவுண்ட்டரில் உள்ள அவரிடம் ரெயில்கள் விவரம் பற்றி கூட கேட்க முடியாத சூழல் உண்டு.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து செயலியில் பணம் செலுத்தி முன்பதிவில்லா டிக்கெட் பெற முடியும். இதேபோல நடைமேடை டிக்கெட் பெறலாம். ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்ய முடியும். இதுதவிர ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு விவரம், காலி இருக்கைகள் விவரம், ரெயில்கள் விவரம், ரெயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த தொடுதிரையில் அறியலாம். பயணிகளுக்கு இந்த எந்திரம் பயனுள்ளதாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.