ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து காலனிதெருவை சேர்ந்தவர் பாலாஜி என்பவரின் மனைவி பார்வதி. இவர் நேற்று காலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கண்ணீர் மல்க அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் பாலாஜி குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய் நாட்டிற்கு ஐஸ் கம்பெனிக்கு கடந்த ஆண்டு வேலைக்கு சென்றார். கடந்த 15-ந் தேதி பேசும்போது தொண்டை வலியாக உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் ஊருக்கு வருவதாக தெரிவித்தார்.
ஆனால், மறுநாள் அவருடன் வேலை பார்த்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். எனது கணவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரின் உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும். எங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு அரசின் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.