மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. மேலும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், இராமேஸ்வரம் திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித்திரிகின்றன.
நடவடிக்கை
இந்நிலையில், இப்பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அப்போது மாடுகள் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நாகப்பட்டினம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பல விபத்துக்கள் நடந்துள்ளது. மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.