கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் பழைய மின் மோட்டார் பழுதானதால் புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் அவுலியா நகர் மற்றும் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் மற்றும் அவுலியா நகர் பகுதிகளுக்கு தனி, தனியாக மின் மோட்டார் வைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவுலியா நகருக்கு விநியோகிக்கப்பட்டு வந்த மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து தண்ணீரின்றி தவித்து வந்த நிலையில் அப்பகுதி மக்கள் புதிய மின் மோட்டார் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று 28.04.2023 புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டது. புதிய மின் மோட்டார் பொருத்தும் பணியின் போது OHT பணியாளர் செய்யது இபுறாஹீம் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் உடனிருந்தனர்.
அவுலியா நகர் பகுதியில் சாக்கடை மற்றும் குவிந்திருக்கும் குப்பையால் அப்பகுதி மக்கள் நோய்வாய் பட்டு, பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே அப்பகுதி மக்களின் துயரங்களை துடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.