மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.!



மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் ஜமாத் நிர்வாகம் சார்பாக இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். நோன்பு திறக்கும் நேரத்தில் இப்தார் நிகழ்ச்சி பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  ஆர்.புதுப்பட்டிணத்தில் நேற்று 20.04.2023 பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் நிர்வாகம் மற்றும் அல் அமீன் இளைஞர் பேரவை சார்பாக இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் R.‌புதுப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள், அல் அமீன் இளைஞர் பேரவை நிர்வாகிகள் அனைத்து மத சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராம ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சுற்றுவட்டார கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஆர்.புதுப்பட்டிணம் மீனவர்கள், மீமிசல் சுற்றுவட்டார அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments