நாட்டின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை வரும் 25ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது தெற்கு ரயில்வேயின் மூன்றாவது ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பத்தினம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு என 11 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இதற்காக திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை கேரளாவில் தொடங்கி வைக்கிறார்.
அதில் திண்டுக்கல் - பழனி - பாலக்காடு மின்சார வழித்தட சேவை குறிப்பிடத்தக்கது. மேலும் திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். கொச்சியில் தண்ணீர் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். அதே நகரில் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஹைபிரிட் படகு சேவையையும் தொடங்கி வைக்கவுள்ளார். இது திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை இயக்கப்படவுள்ளது.
இதையொட்டி இரண்டு முறை சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 587 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 5 நிமிடங்களில் ரயில் கடந்து செல்லும். சராசரியாக மணிக்கு 73 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படும். அதிகபட்ச வேகம் 110 கிலோமீட்டராக இருக்கும். தற்போது திருவனந்தபுரம் டூ காசர்கோடு வரையிலான தூரத்தை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சுமார் 9 மணி நேரத்தில் கடந்து செல்கிறது.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வியாழன் அன்று மட்டும் ரயில் இயக்கப்படாது. மற்ற 6 நாட்களும் ரயில் இயங்கும். கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஷோரனூரில் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று பாலக்காடு எம்.பி வி.கே.ஸ்ரீகண்டன் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதன் விளைவாக ஷோரனூரில் 2 நிமிடங்கள் ரயில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் நேர அட்டவணை வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதன்படி, ரயில் எண் 20634 கொண்ட திருவனந்தபுரம் டூ காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.20 மணிக்கு புறப்படுகிறது.
கொல்லம் 6.07 மணி, கோட்டயம் 7.25 மணி, எர்ணாகுளம் டவுன் 8.17 மணி, திருச்சூர் 9.22 மணி, ஷோரனூர் 10.02 மணி, கோழிக்கோடு 11.03 மணி, கண்ணூர் 12.03 மணி, காசர்கோடு 1.25 மணிக்கு சென்றடையும்.
இதேபோல் ரயில் எண் 20633 கொண்ட காசர்கோடு டூ திருவனந்தபுரம் ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படுகிறது. கண்ணூர் 3.28 மணி, கோழிக்கோடு 4.28 மணி, ஷோரனூர் 5.28 மணி, திருச்சூர் 6.03 மணி, எர்ணாகுளம் டவுன் 7.05 மணி, கோட்டயம் 8 மணி, கொல்லம் 9.18 மணி, திருவனந்தபுரத்தில் 10.35 மணிக்கு வந்தடைகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.