கோபாலப்பட்டிணம் - மீமிசல் பகுதியில் கொளுத்தும் வெயிலுக்கு ரெஸ்ட்.. ஜில்லுனு மாறிய கிளைமேட்





கோபாலப்பட்டிணம்  மீமிசல் பகுதியில்    காலை முதல்  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. 

வெயிலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக தான் வீசியது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்    திடீரென  வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது.  நாளுக்கு நாள் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் தினமும் அவதி அடைந்து வந்தனர். இதனால், உடல் வெப்பத்தை தணிக்க குளிர்ச்சி தரும் பழங்கள், பழச்சாறுகள் குடித்து வந்தனர்.

இந்நிலையில், உடலையும், மனதையும் குளிர்விக்கும் விதமாக,. இன்று காலை முதல் மாலை வரை, சூடான கிளைமேட் மாறி குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments