கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் தொழிலாளர் தினம் மே-1 கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று மே 1ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊாராட்சியில் தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டம் நேற்று 01/05/2023 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையில் நடைபெற்றது..
ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்றார். கடந்த கால வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது..பல்வேறு மனுக்கள் பொதுமக்கள் சார்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது..
இதில் ரேஷன் கடை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 20 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிராமசபையை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து உள்ளனர். 12 வார்டு கொண்ட உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.