புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் கடந்த ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கருகி நாசமானது,
இசிஆர் சாலையை ஒட்டி உள்ள கிராமங்களான கட்டுமாவடியில் இருந்து அரசநகரிபட்டினம் வரை உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு உழுது விதை விதைத்துகளை எடுத்து உரம் இட்டும் கதிர் வருகின்ற தருவாயில் கருகி நாசமானது.
ஆனால் வரை இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை, அதனைகண்டித்து நேற்று இசிஆர் சாலையில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை இதுவரை நடத்தியும் எந்த ஒரு நிவாரணமும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாததை கண்டித்து மீமிசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் எஸ்யூசிஐ கட்சியினுடைய அறந்தாங்கி பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்யானம் ஊராட்சி மன்ற தலைவர் மலையரசன், கடவாக்கோட்டை விவசாயி சாத்தையா, விவசாய சங்க மாநில கமிட்டி உறுப்பினர் சுருளி ஆண்டவர் உள்பட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள், நிகழ்ச்சியில் மீமிசல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.