மீமிசல் கடைவீதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டம்



மீமிசல் கடைவீதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் கடந்த ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கருகி நாசமானது, 

இசிஆர் சாலையை ஒட்டி உள்ள கிராமங்களான கட்டுமாவடியில் இருந்து அரசநகரிபட்டினம் வரை உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு உழுது விதை விதைத்துகளை எடுத்து உரம் இட்டும் கதிர் வருகின்ற தருவாயில் கருகி நாசமானது.

ஆனால் வரை இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை, அதனைகண்டித்து நேற்று இசிஆர் சாலையில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை இதுவரை நடத்தியும் எந்த ஒரு நிவாரணமும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாததை கண்டித்து மீமிசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டம் எஸ்யூசிஐ கட்சியினுடைய அறந்தாங்கி பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்யானம் ஊராட்சி மன்ற தலைவர் மலையரசன், கடவாக்கோட்டை விவசாயி சாத்தையா, விவசாய சங்க மாநில கமிட்டி உறுப்பினர் சுருளி ஆண்டவர் உள்பட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள், நிகழ்ச்சியில் மீமிசல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments