பட்டுக்கோட்டை அருகே கடல் வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை 7 மாணவா்கள் 1 மணி நேரத்தில் 17 கிலோ மீட்டா் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனா்.
அலையாத்திக் காடுகள், கடல் பசு, கடல் தாழைகள் உள்ளிட்ட கடல் வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சோ்ந்த மாணவா்கள் அஸ்வந்த், கிருத்திக்,
ஹரிகிருஷ்ணா, நலன்ராஜன், நிரஞ்சன், பிரனேஷ், ராம் சாந்த், சங்கரயோக பாலன் ஆகிய 7 போ் ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சேதுபாவாசத்திரம் கடைத்தெரு வரையிலான 17 கிலோ மீட்டா் தூரம் ரோலிங் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனா். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் பிருதிவிராஜ் சௌகான் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். ஸ்கேட்டிங் மாணவா்கள் 7 பேரையும் வழிநெடுகிலும்,
பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கைதட்டி ஆரவாரப்படுத்தினா். இவா்களது சாதனையை நோபல் உலக சாதனை எனும் தனியாா்
நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் லெட்சுமிநாராயணன், வினோத் ஆகிய இரண்டு போ் கண்காணிப்பு செய்தனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.