பாடப்புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி அடுத்ததாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் வருகிற கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வரப்பெற்றுள்ளன. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குடோனில் இப்பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
60 ஆயிரம் மாணவர்கள்
இந்த நிலையில் விலையில்லா பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனை சரக்கு வேன், மினி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் 138 பள்ளிகளுக்கு 60 ஆயிரத்து972 மாணவ-மாணவிகளுக்கான புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெறுவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்படும். மேலும் அரசின் விலையில்லா நோட்டுகள், பேக்குகள், காலணிகள் உள்ளிட்டவை வந்தபின் படிப்படியாக அனுப்பப்படும் என்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.