கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இப்போது இந்தியாவில் பல இடங்களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.
இந்த அம்சத்தை கூகுள் நிறுவனம் 2016-ல் அறிமுகம் செய்தது. இருந்தாலும் இந்தியாவில் இந்த அம்சம் கூகுள் மேப்ஸில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இருந்தபோதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான லொகேஷனை ஸ்ட்ரீட் வியூ அம்சத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி மற்றும் வெப் வெர்ஷனில் இதை பயன்படுத்தலாம். இந்த அம்சத்தின் மூலம் பொது இடங்களை மட்டும்தான் பார்க்க முடியும்.
இப்போதைக்கு இந்த அம்சத்தின் மூலம் ஒரு இடத்தின் 360 டிகிரி வியூவை மட்டுமே பார்க்க முடியும். இதன் மூலம் கூகுள் மேப்ஸில் ரியல் டைம் வழிகாட்டி (டேடெக்ஷன்ஸ்) உதவியை பெற முடியாது. இந்த அம்சத்தை தற்போது கூகுள் சோதித்து பார்த்து வருகிறது. இது இமர்சிவ் (Immersive) வியூ என அறியப்படுகிறது.
பயன்படுத்துவது எப்படி?
கூகுள் மேப்ஸை ஓபன் செய்ய வேண்டும்
அதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
தொடர்ந்து கூகுள் மேப்ஸில் உள்ள லேயர் அம்சத்தின் மூலம் ஸ்ட்ரீட் வியூ மோடுக்கு மாற்ற வேண்டும்
அந்த இடத்தில் உள்ள தெருக்கள் நீல நிறத்தில் கோடு போட்டது போல காட்டப்படும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அந்த தெருவின் 360 டிகிரி ஸ்ட்ரீட் வியூவை பெறலாம். முன் செல்வது, பின்புறம் வருவது, பக்கவாட்டிலும் அந்த இடத்தை மேப் கொண்டு பார்க்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.