வடகாடு அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் மின் வாரிய அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக போர்மேனாக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 56). இவர் சம்பத்தன்று இரவு அணவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மின் தடையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த அணவயல் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் சின்னத்துரை (60) என்பவர் லட்சுமணனிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற லட்சுமணனை ஆவணம் கைகாட்டி ரவுண்டான பகுதியில் வைத்து மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்.என்.புரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில், வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.